வற்­றாப்­பளை ஆலயத்துக்குச் செல்வோரின் கோரிக்கை!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் வர­லாற்­றுச் சிறப்பு மிக்க வற்­றாப்­பளை கண்­ணகி அம்­மன் ஆல­யத்­தின் பங்­கு­னித்­திங்­கள் மற்­றும் ஆலயத் திரு­வி­ழாக்­கள் நடை­பெ­றும் காலத்­தில் வற்­றாப்­பளை ஊடாக வந்து செல்­லும் பேருந்­துக்­கள் வற்­றாப்­பளை ஆலய வளா­கத்­தின் வீதி ஊடாக பய­ணிக்­க­வேண்­டும் என்று ஆல­யத்­துக்கு வந்து செல்­லும் பக்­தர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.
மிக நீண்ட இடங்­க­ளில் இருந்­து­வந்து வற்­றாப்­பளை ஆலயச் சந்­தி­யில் இறங்கி 2கிலோ­மீற்­றர் தூரம் நடந்து சென்றே அம்­மன் ஆல­யத்­துக்கு செல்­ல­வேண்­டி­யுள்­ளது. எனவே, வற்­றாப்­பளை ஊடாக செல்­லும் அரச மற்­றும் தனி­யார் பேருந்­துகள் ஒரு­வ­ழி­யா­க­வே­னும் வற்­றாப்­பளை அம்­மன் ஆலய வளா­கத்­துக்கு அரு­கில் உள்ள வீதி­யூ­டாக பய­ணிக்­கு­மா­யின் நீண்ட தூரம் நடத்து செல்­ல­வேண்­டிய தேவை இல்லை என்று பக்­தர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.
கிழமை நாள்­க­ளில் திங்­கள் மற்­றும் வெள்­ளிக்­கி­ழ­மை­க­ளில் அதி­க­ள­வான பக்­தர்­கள் ஆல­யத்­துக்­குச் சென்று வரு­கின்­ற­போ­தும் சிறப்பான நாள்­க­ளி­லா­வது இவ்­வா­றான ஏற்­பாடு இருக்­கு­மாக இருந்­தால் சிறப்­பாக அமை­யும் என்­றும் தூர இடங்­க­ளில் இருந்து ஆல­யத்­துக்கு பேருந்­தில் வந்து செல்­லும் பக்­தர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.