மல்லாவியில் விபத்து 20 வயது இளைஞன் பலி!!!

மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் மது போதையுடனும், தலைக் கவசம் அணியாமலும் பயணித்த மூன்று  இளைஞர்கள் வன்னி விழான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள வீதி வளைவில் பாலத்துடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு விபத்துக் குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர்  உயிரிழந்துள்ளதுடன் மற்றைய ஒருவர்  படுகாயமடைந்துள்ளார்கள்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்
இந்த விபத்துச் சம்பவம் புதன்கிழமை (30/05/18) நன்பகல் 01, மணியளவில் நடை பெற்றுள்ளது, 
மல்லாவியில் இருந்து மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் விபத்துக் குள்ளான நிலையில் சம்பவ இடத்தில் மல்லாவி அணிஞ்சியன்குளம் 02, ஆம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் – ஜெகன் வயது 24, என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். 
சம்பவ இடத்தில் முருகன் – நளின் வயது 20, என்ற இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந் துள்ளார், 
விபத்துச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.