பல்கலைக்கழக மாணவன் உடல் கருகி பலி!

களனி பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவனொருவன், மின்சாரம் தாக்கி, உயிரிழந்துள்ளார்.
​அநுராதபுரம் கெப்பிதிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவனே, இவ்வாறு பலியாகியுள்ளார்.
பல்கலைக்கழக வளாகாத்திலிருந்து மாரிமா மரத்தில் (அம்பரெலா) காய்களைப் பிடுங்குவதற்காக, இரும்பு பொல்லொன்றை எடுத்து, மரத்தில் அடித்துள்ளார். இதன்போது, மரத்துக்கருகில் ​இருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில், இரும்புப் பொல் மோதுண்டமையால், குறித்த மாணவன், சம்பவ இடத்திலேயே, உடல் கருகி பலியானர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை,​ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.