கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் சிறுத்தை ஒன்றை அடித்து கொன்றவர்களை கைது செய்யவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் நுளைந்து மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது.
இந்நிலையில் இவ்விடயம் அறிந்து வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த புலியை பிடிக்க முடியவில்லை. மேலும் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஒருவர் உட்பட 10 பேரை சிறுத்தை தாக்கியுள்ளது.
இந்நிலையில் அவ்விடத்தை விட்டு வனஜீவராசிகள் வெளியேறியதும் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் புலியை மிகவும் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியில் புலியை கொன்றவர்களின் கொடூரமான செயல் வெளிப்பட்டதையடுத்து பலர் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.