எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்களுக்கான அறிவித்தல்!

ஸ்ரீ லங்காவில் எரிபொருள் விநியோகத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் மத்தியில் தேவையில்லாத பிரச்சினையொன்றை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எண்ணெய்த்தாங்கி வாகனங்கள்மூலம் அவசியமான எரிபொருள் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது