ஓடு பிரித்து வீடு புகுந்த கொள்ளையர், 59 வயதுடைய குடும்பத் தலைவியின் வாயைக் கட்டிவிட்டு மிருகத் தனமாக வன்புணர்ந்துள்ளனர். வன்புணர்ந்தபின்னர் 20 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அவரது கணவனின் வாயையும் கைகால்க ளையும் கட்டிப்போட்டு விட்டே கொள்ளையர் இந்தக் கொடூ ரமான இழிசெயலைப் புரிந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு இடத்தில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் சம்பவம் இடம்பெற்றது.
வன்புணரப்பட்ட குடும்பத் தலைவி பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகச்சை பெற்றுவருகிறார்.
முகங்களை மறைத்தவாறும் கையுறைகள் அணிந்தவாறும் இருவர் இந்த இழிசெயல்களைப் புரிந்துள்ளனர். வீட்டில் கணவன் மனைவி இருவருமே வசித்து வருகின்றனர்.
கணவன் உடல் நிலை பாதிக்கப்பட்டவர். முதலில் அவரைக் கட்டிப்போட்டு சத்தமிடாதவாறு வாயையும் கட்டிபோட்டுள்ளனர்.
பின்னர் குடும்பத் தலைவியின் வாயைக்கட்டி மிருகத்தனமாக வன்புணர்ந்துள்ளனர். அவரது தாலி உட்பட 20 பவுண்கள் நிறையுடைய நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அயலவர்களின் உதவியுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கட்டமை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொடூர சம்பவம் பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.
சுழிபுரம் சிறுமி பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, அதற்கான கண்டன ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், குடும்பத் தலைவிக்கு நேற்று இந்தக் கதி ஏற்பட்டுள்ளது.
எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை இடம்பெறுகிறது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.