க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.
மேலும், தபால் ஊழியர்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை காரணமாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டிருந்தது.
அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்கு நாடு முழுவதும் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர்.
அத்துடன் இம்முறை மாணவர்கள் இலகுவில் வினாக்களுக்கு விடையளிக்கும் பொருட்டு மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.