இனிமேல் இலங்கை மக்கள் பாண் சாப்பிட முடியாது!!!

பாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து இவ்வாறு விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு, டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு ஆகிய காரணங்களையொட்டி இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

ஏழைகளின் உணவு என எல்லோரும் அழைத்த இந்த உணவிற்கும் இந்த நிலை வந்து விட்டது என மக்கள் புலம்புகின்றனர்.