யாழில் வீடொன்றில் மூன்று பெண்களைக் கட்டிவைத்து அவர்களிடம் இருந்த ஆறு பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட் பட்ட உரும்பிராயில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை நடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் இறங்கிய திருடர்கள் பெண்களைத் தாக்கி அவர்களைக் கட்டி வைத்துள்ளனர்.
பெண்கள் அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த நகைகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் யாழ்ப்பாணம் போதனா மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளை தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.