வவுனியாவில் நடந்த கோர சம்பவம்; தாயும், மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகே இன்று காலை 10.00 மணியளவில் தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டனர்.

கணவன் வேலைக்கு சென்ற சமயத்தில் 5 வயது, 7 வயதுடைய மகனுடன் தாயார் அயலவர் வீட்டிற்க்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் 5 வயதுடைய மகனையும் குறித்த பெண்ணையும் காணவில்லை என அயலவரின் வீட்டார் தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதுடைய தாயும், 5 வயதுடைய குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டதாகவும் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியுமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர், பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.