வெட்டுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

வவுனியாவடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெட்டுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும் மலையையும் தொல்பொருட்த்திணைக்களம் அபகரிக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் இன்றையதினம் காலை முன்னெடுக்கபட்டது. வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லம் முன்­பாக முற்பகல் 10 மணிக்கு இந்த ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­பட்­ட­து.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமனர் உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா , சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான
சுரேஷ்பிரேமசந்திரன்,வினோநோகராதலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம் ,லிங்கநாதன் ,தியாகராசா உள்ளிட்டவர்களும் கிராம மக்கள்,இளைஞர் அமைப்புகள் ,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

நெடுங்­கேணி ஒலு­மடு பகு­தி­யில் உள்ள வெடுக்­கு­நாறி மலை மீது ஆதி ஐய­னார் ஆல­யம் அமைந்­துள்­ளது. அங்கு மக்­கள் காலங்­கா­ல­மாக வழி­ப­டு­கின்­ற­னர். தற்­போது அது தொல்­லி­யல் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மா­ன­தென அந்­தத் திணைக்­க­ளம் குறிப்­பிட்­டுள்­ளது.

கடந்த 10ஆம் திகதி குறித்த ஆல­யத்தை சேர்ந்­த­வர்­களை நெடுங்­கேணி பொலி­ஸார் அழைத்து விசா­ர­ணைக்­கும் உட்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். ஆல­யத்­துக்­குச் செல்­ல­வேண்­டா­மென்­றும் மீறிச் சென்­றால் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் குறிப்­பிட்­ட­னர். அதற்கு மறு­நாள் ஆடி அமா­வாசை திதி என்­ப­தால் தொல்­லி­யல் திணைக்­க­ளம் மற்­றும் பொலி­ஸா­ரின் அனு­ம­தி­யு­டன் அங்கு சென்று பூசை வழி­பா­டு­களை மேற்­கொண்­ட­னர்.

கடந்த 12ஆம் ­தி­கதி மீண்­டும் ஆலய நிர்­வா­கத்­தி­னரை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலி­ஸார், ஆல­யத்­தில் பூசை வழி­பா­டு­களை மேற்­கொள்ள தடை­யில்­லை­யெ­னக் குறிப்­பிட்­ட­னர்.

ஆனால், ஆல­யத்­தில் மாற்­றங்­கள் செய்­தல், கட்­ட­டங்­களை அமைத்­தல் போன்ற எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கக் கூடா­தென அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். ஆல­யத்தை சூழ­வுள்ள காட்­டுப் பகுதி தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தின் கட்­டுப்­பாட்­டில் உள்­ள­தால், அங்கு செல்­லக் கூடா­தென்­றும் மீறி­னால் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

தமி­ழர்­க­ளின் எல்­லைக்­ கி­ராம பகு­தி­யில் காணப்­ப­டும் இந்த ஆல­யத்தை காலங்­கா­ல­மாக தரி­சித்து வந்த நிலை­யில், அதனை அப­க­ரிக்க முறல்கின்றனர் என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.