செங்கலடி மத்தியகல்லூரியின் பிரபல்ய கணித ஆசிரியரின் மோசமான செயல்!

செங்கலடி மத்திய கல்லூரி கணித பாட ஆசிரியர் உஸைன் என்பவர் மாணவன் ஒருவரை கண்மூடிதனமாக தாக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

செங்கலடி மத்தியகல்லூரியில் கணித ஆசிரியராக கடமைபுரியும் ஏறாவூரை சேர்ந்த உஸைன் எனும் கணிதபாட ஆசிரியர் செங்கலடியைச்சேர்ந்த பத்தாம் தரத்தில் படிக்கும் மாணவன் ஒருவரை நெற்றியில் பலகையால் தாக்கியுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலைக்கு கணிதபாட புத்தகம் கொண்டு செல்லாமையினாலே இவ்வாறு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் பலகையால் தாக்கியதால் மாணவனிற்கு நெற்றியில் எட்டு தையல் போடப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது.

மாணவர்கள் இடும் தவறுகளை தண்டிப்பதை நாம் ஏற்கவேண்டும் ஆனால் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை ஒருபோதும் ஏற்க முடியாது.

எனவே இத்தகைய ஆசிரியரிற்கு விசாரணை இடம்பெற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலயக்கல்வி பணிப்பாளர், மற்றும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான அதிகாரிகளது கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.