கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண் பணியாளர் செய்த அதிர்ச்சிகர செயல்!

கிளிநொச்சி அக்காராயன் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் பணியின் நிமிர்த்தம் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை முயற்சித்துள்ளார் என ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை ஊழியர்கள் காப்பாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் நேற்றைய தினம் வைத்தியசாலையில் கடமை நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் போது உடனடியாக செயற்பட்ட ஏனைய பணியாளர்கள் அவரை காப்பாற்றி அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

பணியின் நிமிர்த்தம் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடந்த சில நாட்களாக மனச் சோர்வுக்குட்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக சக பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.