யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் கத்தி, கொட்டன்களுடன் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், வீடுகளில் இருந்த பொருட்கள், வேலிகள், மின்குமிழ்களை தாக்கி சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
இந்த சம்பம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை வேளையில் வீட்டு வளவுக்குள் நுழைந்த 4 பேர், முற்றத்தில் இருந்த மின்குமிழை முதலில் உடைத்துத்துள்ளனர்.
பின்னர் நீர்த்தாங்கி, கதிரைகள், உள்ளிட்ட தளபாடங்களை சேதமாக்கிய நிலையில், வீட்டின் உரிமையாளர் குரல் எழுப்ப அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
அதன்பின் அந்தப் பகுதியில் உள்ள 4 வீடுகளுக்குள் அந்த கும்பல் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
வீட்டு வேலிகளைச் சேதமாக்கியதுடன், வீட்டு வளவில் இருந்த பொருட்களைச் சேதமாக்கினர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக 119 அவசர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்தனர்.
முற்பகல் 10 மணியளவிலேயே சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை நடத்தினர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.