முல்லைத்தீவு மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; மீள இயங்கவுள்ள தொழிற்சாலைகள்!

இலங்கையில் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை உட்பட 2 தொழிற்சாலைகள் அடுத்த வருடம் மீள இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பு வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளது.