​கொழும்பில் குவிந்த ஜ.தே.க தொண்டர்கள்; நீதிமன்றம் விதித்துள்ள கடும் நிபந்தனை!

தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனையுடனான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரச மற்றும் பொதுமக்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காத வண்ணமும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வண்ணமும் இந்த ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பமாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கறுவாத்தோட்டை பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

குறித்த அறிக்கையை விசாரித்த நீதவான் மேற்படி நிபந்தனையை விதித்து உத்தரவிட்டார். இதன்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.