முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் என்று கூறிய இரண்டு பேர் இன்று மதியம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
அலரிமளிகைக்குள், இன்று (புதன்கிழமை) மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இருவர் நுழைந்தமையாலேயே இந்த பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு பேரும் அவர்களின் அடையாளத்தை ஒப்புவிக்காமலும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்காமலும் உள்நுழைந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரினதும் அடையாம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அலரி மாளிகையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். எனினும், ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையிலிருந்து வெளியேறாமல் அங்கே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.