கணவரை பிரிந்து வேறு பெண்ணுடன் தனிவீடு எடுத்து ஒன்றாக தங்கிய 22 வயது மனைவி… அதன் பின் நடந்த விபரீதம்!

தமிழகத்தில் கணவரை பிரிந்து பெண் ஒருவருடன் தனி வீட்டில் தங்கிய மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவராலேயே தனது மகனை இழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரவேல். இவர் மனைவி பேச்சியம்மாள் (22). இவர்களுக்கு அழகுவேல் (5), மதியழகன் (3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து பேச்சியம்மாள் ஜெயமணி என்ற பெண்ணுடன் பொள்ளாச்சி அருகே நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது உறவினரான பிரகா‌‌ஷ் (19) என்பவருடன் அவருக்கு தவறான பழக்கம் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்லூருக்கு வந்த பிரகா‌‌ஷ், பேச்சியம்மாளுடன் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் சிறுவன் மதியழகன் வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறி அரசு மருத்துவமனைக்கு பேச்சியம்மாள், பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கொண்டு வந்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் சிறுவனின் முகம் உள்பட உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அங்கிருந்து பிரகாஷ் தப்பியோடி தலைமறைவானார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சிறுவனின் தாய் பேச்சியம்மாள் மற்றும் ஜெயமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் பிரகா‌‌ஷ் தான் மதியழகனை கொ லை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரகாஷை பொலிசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், பேச்சியம்மாளுக்கும், எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதற்கு மதியழகன் இடையூறாக இருந்ததால் அவனை கொ லை செய்ததாக கூறியுள்ளார்.