ஐப்பசி மாதத்தில் எந்த எந்த ராசிக்கு எப்படிபட்ட பலன்கள் தேடிவர போகுது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மேஷம்
ஐப்பசி மாதத்தின் துவக்கத்தில் சற்று சிரமமான நிலையைக் காணும் நீங்கள் அக்டோபர் 29ம் தேதி முதல் சாதகமான பலன்களைக் காண உள்ளீர்கள். எதிர்பாராத செலவினங்கள் கையிருப்பைக் கரைக்கும்.
நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்து வருவதால் மன வருத்தம் உண்டாகும்.
என்னதான் உழைத்தாலும், என்னதான் சம்பாதித்தாலும் முழு திருப்தி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் மனதில் அதிகமாக இருந்து வரும்.
ஆதங்கம் ஒருபுறம் இருந்தாலும் செவ்வாயின் சாதகமான பார்வைபலத்தால் செயல்வேகம் கூடும். சரியான உதவியாளரைத் தேடி வருவீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து வருவீர்கள்.
குடும்பத்தில் அநாவசியமான பிரச்னைகள் தோன்றும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை கருத்துக்கள் அதிகம்வெளிப்படும். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். வண்டி,வாகனங்களால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம்.
மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின்ஆலோசனைகள் சரியான சமயத்தில் கைகொடுக்கும். மன உளைச்சலின் காரணமாக உடல்நிலையில் சிறிது சிரமத்தினைக் காண நேரிடும்.
வாழ்க்கைத்துணையுடன் வீண் வாக்குவாதத்தின் காரணமாக கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. உறவுமுறைப் பெண்களால் அதிக செலவுகளை சந்திப்பீர்கள். நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் காண்பீர்கள். கூட்டுத்தொழில் நல்ல லாபத்தினைத் தரும்.
உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்திற்கு ஆளாவார்கள்.கலைத்துறையினர் தடைகளைத் தாண்டி முயற்சிக்க வேண்டியிருக்கும். தேடுதல் நிறைந்த மாதம்இது.
சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 29, 30, 31.
பரிகாரம்: சூரசம்ஹார நாளில் அன்னதானம்.

ரிஷபம்
இந்த மாதத்தில் நடைபெற உள்ள குருபெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரும். எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உண்டாகும்.
இக்கட்டான சந்தர்ப்பத்தில் சரியான நபர்கள் மூலமாக உதவி கிடைக்கக் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்து வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருவீர்கள்.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இந்த மாதத்தில் கடன்கொடுப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு அதிகமாக வெளிப்படும். ஆயினும் அடுத்தவர்களை கேலி செய்யும் விதமாக வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள்.
தகவல் தொடர்பு சாதனங்கள் பணிகளை விரைவாக செய்துமுடிக்க உதவி செய்யும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதீத எச்சரிக்கை தேவை. முடிந்தவரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் தங்களின் கல்வி நிலையில் எதிர்பாராத இடைஞ்சலை சந்திக்கக் கூடும்.
கூட்டுப்பயிற்சி முறை மிகுந்த நன்மை தரும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய நேரிடும். நவம்பர் மாதத்தின் முற்பாதியில் தொற்று நோய்களால் அவதிப்படும் வாய்ப்பு உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வகையில் உணவுப் பழக்கத்தினை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்களின் செயல்வெற்றிக்குத் துணை நிற்கும். பங்கு வர்த்தகம், இன்ஸ்யூரன்ஸ், ஃபைனான்ஸ் போன்ற நிதித்துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள்.
ஷேர் மார்க்கெட் துறையில் உள்ளவர்கள் ஓரளவு லாபம் கிடைத்தவுடன் வர்த்தகத்தை முடித்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு அநாவசியக் கற்பனைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : நவம்பர் 1, 2.
பரிகாரம்: அன்னாபிஷேக நாளில் சிவாலய வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்
ராசிநாதன் புதனின் ஐந்தாம் இடத்துச் சஞ்சார நிலை தொடர்வதால் எந்த ஒரு பணியையும் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே செய்யத் துவங்குவீர்கள். அதே நேரத்தில் வீண் காலதாமதம் செய்யாமல் உடனடியாக செயல்படுவது நல்லது.
பருவத்தே பயிர் செய்’’ என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எளிதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நற்பலன்கள் வந்து சேர்வதில் தடைகளை சந்திக்கநேரிடும்.
இறங்கிய காரியங்களில் இழுபறியை சந்தித்தாலும் விடாமுயற்சியைக் கொண்டிருக்கும் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். இந்த மாதத்தில் பொருளாதார நிலை நன்றாக இருந்து வரும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடித்து வருவீர்கள். தைரிய ஸ்தானாதிபதி சூரியன் விடாமுயற்சிக்கு துணைநிற்பார். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் பணிகளுக்கு மற்றொரு கரமாக துணை நிற்கும்.
வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் நல்லமுன்னேற்றத்தினைக் காண்பார்கள். உறவினர்களோடு ஒரு சில விஷயங்களில் கருத்துவேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் செயல்கள் உங்கள்கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும்.
அவர்களின் உடல்நிலையில் கவனம்செலுத்த வேண்டிய நேரம் இது. அக்டோபர் மாத இறுதியில் பெண்களின் வழியில் வீண்வம்பு, வழக்குகள், அநாவசிய பிரச்னைகள் வந்து சேரலாம். நமக்கு சம்பந்தமில்லாதவிஷயங்களில் தலையிடுவது கூடாது.
வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயன்தரும் வகையில் அமையும். தொழில்முறையில் நேர்மையான செயல்பாடுகள் நற்பெயரைப் பெற்றுத் தரும். கலைத்துறையினர் போட்டியான சூழலைக் காண்பார்கள். விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டிய மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : நவம்பர் 3, 4.
பரிகாரம்: கிருஷ்ண பகவானை வழிபட்டு வர கவலைகள் தீரும்.

கடகம்
இந்த மாதத்தில் நற்பலன்களைக் காண உள்ளீர்கள். எண்ணிய காரியங்களை செய்துமுடிக்க மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருவீர்கள். செயலில் சுறுசுறுப்பு வெளிப்பட்டாலும் மனதளவில் லேசான குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.
ஒரு காரியத்தை செய்து முடிக்க வெவ்வேறு விதமான யோசனைகள் மனதில் தோன்றி உங்களைக் குழப்பும். எந்த முறையை செயல்படுத்தி வெற்றி காண்பது என்பதில் தெளிவான முடிவெடுக்க இயலாத சூழல் உருவாகும்.
ஆயினும் இறங்கிய காரியத்தில் வெற்றி காண வேண்டும் என்ற முனைப்பு சதா மனதில் இருந்து வரும். பேசும் வார்த்தைகளில் சிறிது கறார்தன்மை வெளிப்படும்.
அளந்து பேசினாலும் அர்த்தத்துடன் பேசுவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவீர்கள். திறமையான செயல்பாடுகள் நற்பெயரைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டு வரும். உடன்பிறந்தோருடன் இணைந்து நிலுவையில் இருந்து சொத்து பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.
தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும். மாணவர்கள் பாடங்களில் தோன்றும் சந்தேகங்களுக்கு தயக்கமின்றி உடனுக்குடன் ஆசிரியரிடம் தெளிவு பெறுவது நல்லது.
வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்பாடுகளை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.
வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் செயல்வெற்றிக்குத் துணைபுரியும். பொதுப்பணிகளில் முன்நின்று செயல்பட வேண்டியிருக்கும்.
ஆன்மிகப் பணிகள், பொதுக்காரியங்கள் ஆகியவற்றில் முழுமையான மனதிருப்தியுடன் செயல்பட்டு வருவீர்கள். தொழில்முறையில் உண்டாகும் போட்டியினை அயராத உழைப்பின் மூலம் வெற்றி காண்பீர்கள். சாதகமான பலன்களைக் காணும் நேரம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 5, 6, 7.
பரிகாரம்: யோக ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.

சிம்மம்
ராசிநாதன் சூரியனின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரமும், புத்திகாரகன் புதபகவான் ராசிநாதனோடு இணைவு பெற்றுள்ள நிலையும் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை குடிபுகச் செய்யும்.
செயல்வேகத்தோடு விவேகமும் இணையக் காண்பீர்கள். நினைத்த காரியங்களை எந்த ஒரு நிலையிலும் தள்ளிப் போடாமல் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருவீர்கள்.
அதே நேரத்தில் அடுத்தவர்களோடு இணைந்து செய்யும் பணிகளில் உங்களின் பிடிவாதமான நிலையினை சற்று தளர்த்திக் கொள்வது நல்லது.
பேச்சினில் நிதானத்தைக் கடைபிடித்தாலும் வார்த்தைகளில் வெளிப்படும் கடுமையான கருத்துக்கள் அடுத்தவர் மனதினைப் புண்படுத்தக்கூடும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். பொருளாதார நிலை நல்ல முன்னேற்றம் கண்டு வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.
தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் சற்று இடைஞ்சலாகவும், இரவு நேரத்தில் சாதகமாகவும் செயல்பட்டு வரும். வண்டி, வாகனங்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் காண்பீர்கள். பிரயாணத்தின்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
அந்நிய மனிதர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. உறவினர்களால் உண்டான கலகங்களுக்கு தீர்வு காண முற்படுவீர்கள். மாணவர்களின் தங்களின் தனித்திறமையின் மூலம் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கும்.
பொதுக்காரியங்களில் உங்களின் ஆலோசனைகள் வெற்றியைத் தருவதோடு சிறப்பான நற்பெயரைப் பெற்றுத் தரும். வாழ்க்கைத்துணையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களோடு இணைந்து செய்யும் பணிகளில் சற்று விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
கூட்டுத்தொழில் சிறப்பான லாபத்தினைத் தரும். கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் ஆதாயம் காண்பர். விவேகமான செயல்பாடுகளின் மூலம் வெற்றி காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : நவம்பர் 8, 9.
பரிகாரம்: ஸ்ரீராமஜெயம் எழுதி வழிபடுங்கள்.

கன்னி
ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் செவ்வாய் இந்த மாதத்தில் சுறுசுறுப்பைத் தருவார். சாதகமான கிரஹ நிலையைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்கால நலன் கருதி கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம். தன ஸ்தானமும், தைரிய ஸ்தானமும் வலிமை கொள்கிறது. தைரிய ஸ்தானத்தின் வலிமை உங்கள் செயல்வெற்றிக்குத் துணை நிற்கும்.
முக்கியமான காரியங்களில் இறங்கும்போது மனதின் மூலையில் சிறிது தயக்கம் இருந்து வந்தாலும் நடப்பது நடக்கட்டும் என்ற தைரியத்துடன் செயல்பட கிரஹ நிலை துணை நிற்கும்.
செயல்படாமல் சும்மா இருப்பதை விட வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது நல்லது என்ற எண்ணத்துடன் செயலில் இறங்கி விடுவீர்கள். பேசும் வார்த்தைகளில் உங்களையும் அறியாமல் சிறிது கடுமை வெளிப்படக்கூடும்.
குடும்பப் பிரச்சினைகளில் உங்களின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறும்.பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் கண்டு வருவீர்கள்.
குடும்பத்தில்சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி இருந்து வரும். முக்கியமான நேரத்தில்உடன்பிறந்தோரின் ஆலோசனைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தரும்.தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் பணிகளுக்கு மிகுந்த உதவியாய் அமையும்.
மாணவர்கள் ஞாபக மறதித் தொல்லையால் சற்று அவதிப்படுவார்கள்.பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் தனி ஆர்வம் கொள்வீர்கள்.
வாழ்க்கைத்துணையின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். நண்பர்களை நம்பிஒப்படைத்த பணிகளில் சுணக்கத்தினை சந்திக்க நேரிடும்.
பெற்றோருடன் சிறிது கருத்துவேறுபாடு தோன்றக்கூடும். தொழில்முறையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்லவேண்டியது அவசியம். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். நற்பலன்களைக்காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 10, 11, 12.
பரிகாரம்: அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு வெற்றி தரும்.

துலாம்
ராசிநாதன் சுக்கிரனின் சாதகமான சஞ்சாரம் இந்த மாதத்தில் தனலாபத்தைக் கூட்டும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் மிகுந்த வேகம் காட்டி வருவீர்கள். சுயகௌரவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் நீங்கள் உங்களைச் சார்ந்து இருப்பவர்களோடு அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. அக்டோபர் 29ம் தேதி முதல் திருப்புமுனை காண்பீர்கள்.
வாக்கு ஸ்தானத்தின் வலிமை பேச்சுத்திறனை அதிகரிக்கச் செய்து செயல்வெற்றிக்குத் துணை புரியும். இடம், பொருள், ஏவல் அறிந்துபேசி வெற்றி கண்டு வருவீர்கள். உங்களின் பேச்சு சாதுர்யம் சிறப்பான தனலாபத்தினைப்பெற்றுத் தரும்.
குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி இருந்து வரும்.பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.
உடன்பிறந்தோருடன்கருத்து வேறுபாடு தோன்றும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் குறிப்பிடத்தகுந்தநன்மையை அடைவீர்கள்.
பிரயாணத்தின்போது உண்டாகும் சந்திப்புகள் உங்களின் நட்புவட்டத்தினை விரிவடையச் செய்யும். ஞாபகமறதியின் காரணமாக மாணவர்கள் தங்கள்கல்வி நிலையில் சற்று சிரமத்தினைக் கண்டு வருவார்கள். உறவினர்களால் கூடுதல்செலவுகளுக்கு ஆளாக நேரிடும்.
பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்குமாறாக அமையக்கூடும். முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமங்கள் உண்டாகலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயனுள்ள வகையில் அமையும். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
சுயதொழில் செய்வோர் முற்பாதியில் உழைத்து பிற்பாதியில் லாபத்தினைக் காண்பர். கலைத்துறையினர் தங்கள் திறமையினை வெளிப்படுத்த சரியான வாய்ப்பினைப் பெறுவார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 18, நவம்பர் 13, 14.
பரிகாரம்: தீபாவளி நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதால் மனதில் மகிழ்ச்சி நிறையக் காண்பீர்கள்.

விருச்சிகம்
ராசிநாதன் செவ்வாயின் அமர்வு நிலை உங்களுக்கு சிறப்பான நற்பலன்களை ஏற்படுத்தித்தரும் வகையில் அமைந்துள்ளது. அயராத உழைப்பின் காரணமாக செயலில் வெற்றி கண்டு வருவீர்கள்.
வெற்றியைத் தரும் 11ம் இடத்தின் அதிபதி புதன் 12ல் அமர்ந்திருப்பது கூடுதல் அலைச்சலைத் தரும். ஆயினும் ராசியில் சுக்ரனின் இணைவினால் அக்டோபர் 29ம் தேதி முதல் நினைத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நடந்தேறும்.
மனதில் உறுதியும், உத்வேகமும் கூடும். நேரத்திற்குத் தகுந்தவாறு விவேகத்துடன் செயல்பட்டுவெற்றி கண்டு வருவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் விவேகமான கருத்துக்கள் அதிகம் வெளிப்படும்.
உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சிரமத்தினைத் தரலாம். பொதுப்பிரச்சினைகளில் நண்பர்களோடு இணைந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
வண்டி, வாகனங்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் உண்டாகும். வாரத்தின் இறுதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்களால் ஒரு சில விஷயங்களில்தர்மசங்கடமான சூழலை சந்திக்க நேரலாம். மாணவர்கள் எழுத்துப்பயிற்சியில்ஈடுபடுவது நல்லது.
பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாகஅமையக்கூடும். அவர்களின் பெயரில் சேமிப்பில் இறங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் தீவிர கவனம்செலுத்த வேண்டியது அவசியம்.
வாழ்க்கைத்துணையின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரித்து வருவது போல உணர்வீர்கள். தொழில்முறையில் உங்களின் செயல்வேகம் அதிகரிக்கக் காண்பீர்கள். நற்பலன்களைத்தரும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 19, 20, நவம்பர் 15, 16.
பரிகாரம்: சனிக்கிழமை நாளில் அன்னதானம் வழங்கவும்.

தனுசு
ராசிநாதன் குரு பகவானின் பெயர்ச்சியும், ஜெய ஸ்தானத்தின் வலிமையும் இந்த மாதத்தில் உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும். பொதுக்காரியங்களில் முன் நின்று செயல்பட வேண்டிய சூழலை உருவாக்கும்.
கௌரவம் கருதி செய்ய வேண்டிய ஆடம்பரசெலவுகள் அதிகரிக்கலாம். கற்பனையில் இருக்கும் விஷயங்களைநடைமுறைப்படுத்துவதில் கூடுதலாக செலவழிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும்கலகலப்பும் கலந்திருக்கும்.
பேசும் வார்த்தைகளில் அனுபவத்தின் காரணமாக பொருள்பதிந்த கருத்துக்கள் வெளிப்படும். முக்கியமான நேரத்தில் அதிகம் பேசுவதை விட உங்கள்கருத்துக்களை கூர்மையான எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தி வெற்றி காண்பது நல்லது.தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் செயல் வெற்றிக்குத் துணை நிற்கும்.
உடன்பிறந்தசகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். ருசியான உணவு வகைகளை உண்பதில் சிறப்புஆர்வம் இருந்து வரும். வண்டி, வாகனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனுள்ளவகையில் அமையும். உறவினர்களால் குறிப்பிடத்தகுந்த அனுகூலம் காண்பீர்கள்.
மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளின் ஆலோசனைகள்முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.
குடும்பத்தினரோடு தொலைதூரப்பிரயாணம் செல்வதற்கான திட்டமிடுதலில் இறங்குவீர்கள். வாழ்க்கைத்துணையோடு வீண்விவாதத்தின் காரணமாக அவ்வப்போது கருத்துவேறுபாடு கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
தொழில்முறையில்உங்களின் சிறப்பான செயல்பாடுகள் நற்பெயரோடு குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினையும்பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வு சார்ந்த பயிற்சிக்காக வெளியூர் செல்லநேரிடும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : அக்டோபர் 21, 22.
பரிகாரம்: ஐஸ்வர்யேஸ்வரரை வணங்கி வர தனலாபம் சீராக இருக்கும்.

மகரம்
ஏழரைச்சனியின் கடுமையோடு 12ம் இடத்தில் வந்து அமர உள்ள குருவும் சற்று சிரமத்தினைத் தருவார். என்றாலும் இதர கிரஹங்களின் சாதகமான நிலை இந்தமாதத்தில் சாதகமான பலனைத் தரும். உண்மையாக உழைப்பதன் மூலம் தனி கௌரவம் அடைவீர்கள்.
விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் எளிதில் காரியத்தடைகளைத் தாண்டிவருவீர்கள். நினைத்தது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததைக் கொண்டு சிறப்பாகச்செயல்படவேண்டும் என்ற உண்மையைப் புரிய வைப்பீர்கள். மனதில் தத்துவசிந்தனைகள் அதிகமாக ஊற்றெடுக்கும்.
குடும்ப விவகாரங்களில் முன்நின்று செயல்பட்டுபிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவீர்கள். பொருளாதார நிலையில் ஒரே சீரானநிலையைக் காண்பீர்கள். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் பொருள் நிறைந்தகருத்துக்கள் அடுத்தவர்களை சிந்திக்க வைக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யநேரிடும்.
உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் வகையிலான ஆன்மிகச்சந்திப்பு ஒன்றிற்கான வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் கடுமையான உழைக்கவேண்டியது அவசியம். பிரயாணத்தில் பொருளிழப்பு உண்டாவதற்கான வாய்ப்புஉள்ளதால் சக பயணிகளிடம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வண்டி,வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும்.
பிள்ளைகளின் செயல்கள் பெருமிதம்கொள்ளத்தக்க வகையில் அமையும். தம்பதியராக இணைந்து செய்யும் காரியங்களில்வெற்றியைக் கண்டு வருவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் கூடுதல்செலவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
தொழில்முறையில் உங்களின் திறமையானசெயல்பாடுகள் சிறப்பான நற்பெயரைப் பெற்றுத் தரும். வியாபாரிகள் எதிர்பார்த் தனலாபத்தினை அடையும் நேரம் இது. கலைத்துறையினர் தொழில்நுட்ப ரீதியாக வெற்றியைக்காண்பர். நற்பலன்களை அனுபவித்து உணரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : அக்டோபர் 23, 24.
பரிகாரம்: சுவாமி ஐயப்பனை வழிபட்டு வாருங்கள்.

கும்பம்
இந்த மாதத்தில் சற்று போராடி வெற்றி கண்டு வருவீர்கள். நினைத்தகாரியங்களைச் செய்து முடிக்க கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் கூட சற்று இழுபறியைத் தரும்.
நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பது கண்டு மனதில் நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்ற குழப்பம் அவ்வப்போது மனதில் எட்டிப்பார்க்கும்.
சிறு காரியங்களுக்குக் கூட பெருமுயற்சி செய்ய வேண்டியிருக்கும். பலவீனமான கிரஹ நிலையை சமாளிக்க இராசிநாதன் சனி பகவான் துணைநிற்கிறார்.கடமையைச் செய்வதில் சற்றும் மனம் தளராத நீங்கள் எச்சூழலையும் எதிர்கொள்ளதயாராக இருப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பொருளாதாரநிலையில் சீரான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். பேசும் வார்த்தைகளில் தெளிவானஸ்திரமான கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.
உடன்பிறந்தோருக்கு தொழில்முறையில்உதவி செய்ய வேண்டியிருக்கும். புதிய மனிதர்களுடனான சந்திப்பின் மூலம் அனுபவஅறிவினைப் பெறுவீர்கள்.
உறவினர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிட வேண்டியசூழல் உருவாகும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகிய இனங்களால்செலவினங்கள் கூடும். மாணவர்கள் சோம்பலை விடுத்து சுறுசுறுப்புடன் செயல்படவேண்டியது அவசியம்.
பிள்ளைகளின் வேகமான செயல்கள் மனதில் ஒருவிதஅச்சத்தினைத் தோற்றுவிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்ற காலநேரம் சாதகமாக அமையும்.
கூட்டுத்தொழில் செய்பவர்கள் நல்ல தனலாபத்தினைக்காண்பார்கள். வியாபாரிகள் ஓய்வின்றி உழைத்து சிறப்பான தனலாபத்தினைஅடைவார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுகமான சூழலை அனுபவிப்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த விருதும் பாராட்டும் வந்து சேரும். வாழ்வியல் தரம் உயரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : அக்டோபர் 25, 26.
பரிகாரம்: பிரதோஷ நாளில் நந்தியை வழிபட கஷ்டங்கள் விலகிடும்.

மீனம்
ராசிநாதன் குருபகவானின் பெயர்ச்சி கடுமையான உழைப்பிற்க வழி வகுக்கும். அக்டோபர் 29ம் தேதி முதல் சோர்வு நீங்கி செயல்வேகம் அதிகரிக்கக் காண்பீர்கள்.
எட்டாம் இடத்தின் வலிமை கூடுவதால் அநாவசிய ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் அடிக்கடி சிரமங்களை சந்தித்தாலும் ஒவ்வொரு விஷயத்திலும் ஆழ்ந்த அனுபவ அறிவினைப் பெறுவீர்கள்.
ராசிநாதன் குரு பகவான் மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தினையும் இடம்பெறச் செய்வார். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இருந்து வரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.
பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் கருத்துக்கள் அதிகம் வெளிப்படும். நீங்கள் சொல்லும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு அவப்பெயர் உருவாகலாம்.
உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும் வகையில் அமையும். உறவினர்களோடு பழகும் போது இடைவெளி தேவை. மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
வண்டி, வாகனங்களில் முன்பின் தெரியாத நபர்களை ஏற்றுவதால் புதிய பிரச்னைகள் தோன்றலாம். பிள்ளைகளின் செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். தொற்றுநோய் சார்ந்த பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றலாம்.
வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களுக்கு முக்கியமான நேரத்தில் கைகொடுக்கும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட்டு சிறப்பான நற்பெயரை அடைவீர்கள்.
கலைத்துறையினர் தொழில்முறையில் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 27, 28.
பரிகாரம்; வியாழன் தோறும் சாயிநாத ஸ்வாமி கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.
