இந்த வார ராசிப்பலன்கள் (20-10-2019 – 26-10-2019) : எதிர்பாராத அதிர்ஷ்டம் யாருக்கு?

20-10-2019 முதல் 26-10-2019 வரை இந்த வார ராசிப்பலனில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்: ராகு, செவ்வாய், சந்திரன் நற்பலன்களை தருவர். மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும்.

உங்கள் செயல் திறனை வளர்த்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர் ஓரளவு உதவுவர். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புத்திரர் உங்கள் சொல்லை தயக்கமுடன் ஏற்று கொள்வர். மருத்துவ சிகிச்சையால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். நிலுவை பணம் வந்து சேரும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பண செலவில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.
பரிகாரம் : சிவன் வழிபாடு நம்பிக்கை தரும்.

ரிஷபம்: புதன், சூரியன், குரு, சந்திரன் சுப பலன் வழங்குவர். புதியவர்களின் உதவி கிடைக்கும். நிலுவை பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள்.

புதிய வாகனம் விரும்பியபடி வாங்கலாம். புத்திரர் பெற்றோரின் வழி காட்டுதல் ஏற்று நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் தாராள பண வரவு கிடைக்கும். குடும்ப விவகாரத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியிடம் கருத்துகளில் அதிருப்தி வராமல் நடந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாக மாற்று திட்டம் பயன்படும். பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் பின்பற்ற வேண்டும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் ஞாபக திறன் வளர்த்து படிப்பில் சிறப்பிடம் பெறுவர்.
பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

மிதுனம்: சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நன்மை கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையை பாதுகாத்திடுங்கள்.

நண்பர்களிடம் நிதானித்து பேசுவது நல்லது. பணிகள் அதிக உழைப்பால் சிறப்பாக நிறைவேறும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேறுவர். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் நற்செயல் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரம் செழித்து வரவு கூடும். பணியாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புடன் சலுகை கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் குடும்ப விஷயங்களை கணவரிடம் பேசி தீர்வு காண்பர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல கூடாது.
பரிகாரம் : நாகதேவதை வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கடகம்: பெரும்பான்மை கிரகங்களால் ராஜயோக பலன் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். பண வரவு அதிகம் பெற புதிய வழி பிறக்கும்.
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகன பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் பெற்றோர் சொல் கேட்டு செயல்படுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் ஆலோசனை உங்கள் மனதில் புதிய மாற்றம் தரும். குடும்ப தேவை பெருமளவில் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் கேட்ட நிதியுதவி வந்து சேரும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு சந்தோஷ வாழ்வு தரும்

சிம்மம்: ராகு, சுக்கிரன், சூரியன், சந்திரன் அதிர்ஷ்ட பலன்களை தருவர். நண்பர்களுக்கு உதவுவீர்கள்.

தாயின் அன்பு நிறைந்த வாழ்த்து கிடைக்கும். புத்திரர் அறிவு, செயல் திறனில் மேம்படுவர். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் பேணுவதில் உரிய கவனம் வேண்டும். மனைவி விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரம் அதிக உழைப்பால் செழித்து வளரும். அரசு சார்ந்த உதவி பெறலாம். பணியாளர்கள் பணி திறன் அதிகரித்து சலுகை பெறுவர். பெண்கள் உறவினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து பாராட்டு பெறுவர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

கன்னி: சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் நம்பிக்கை வளரும்.
வீடு, வாகனத்தில் பாதுகாப்பு வேண்டும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்குவதில் தாமதம் இருக்கும். அதிக நிபந்தனையுடன் பண கடன் பெற வேண்டாம். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம் : ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

துலாம்: குரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரரால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். பணிகளில் செயல் திறன் பரிமளிக்கும்.

உடன் பிறந்தவர் அதிக அன்பு பாராட்டுவர். பால் பாக்ய யோகம் உருவாகி செல்வ வளங்களை தரும். புத்திரர் படிப்பு, வேலையில் புதிய அணுகுமுறையை பின்பற்றுவர். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வழக்கு, விவகாரத்தில் அனுகூல தீர்வு கிடைக்கும். மனைவி விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து அதிக தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

விருச்சிகம்: சுக்கிரன், செவ்வாய், சந்திரனால் சில நன்மை வந்து சேரும். எதிர் கால நலன் பற்றிய சிந்தனை உருவாகும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.

சமூகத்தில் உங்கள் மீதான அந்தஸ்து கூடும். புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதல் ஏற்று செயல்படுவர். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி உண்டு. தொழிலில் லாப விகிதம் குறைத்து விற்பனையில் முன்னேற்றம் அடைவீர்கள். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பணியாளர்கள் அக்கறையுடன் பணி புரிவர். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.
சந்திராஷ்டமம் : 20.10.19 காலை 6:00 மணி – 21.10.19 காலை 8:59 மணி
பரிகாரம் : அம்மன் வழிபாடு வெற்றியளிக்கும்.

தனுசு: சுக்கிரன், புதன், சூரியன், சந்திரனால் சுப பலன் உண்டாகும். நண்பரின் உதவி மனதில் நம்பிக்கையை வளர்க்கும்.

தாய் வழி உறவினர்களின் செயல், புரியாத புதிர் போல இருக்கும். பூர்வ சொத்தில் ஓரளவு பணவரவு கிடைக்கும். புத்திரர் பெற்றோரின் எண்ணங்களை உணர்ந்து நடந்து கொள்வர். உடல் ஆரோக்கியம் மேம்பட சத்தான உணவும், சீரான ஓய்வும் அவசியம். மனைவியின் ஆலோசனை குடும்பத்தின் எதிர் கால நலனுக்கு உதவும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் செழித்து வளரும். பணியாளர்கள் சிறப்பாக பணி புரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

மகரம்: ராகு, சூரியன், புதன், குரு அளப்பரிய நன்மைகளை தருவர். சிரமம் விலகி பணிகள் பூர்த்தியாகும்.

பண வரவில் முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவருக்கு உதவுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். புத்திரர் படிப்பு, செயல் திறனில் தாமதம் ஏற்படலாம். இஷ்ட தெய்வ வழிபாடு சில நன்மைகளை தரும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். மனைவி குடும்ப நலன் பேணி காத்திடுவார். தொழில், வியாபாரத்தில் அதிக மூல தனம் தேவைப்படும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் உறவினர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சி முறையை பின்பற்றுவர்.
சந்திராஷ்டமம் : 23.10.19 பகல் 12:14 மணி – 25.10.19 பகல் 2:36 மணி
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கும்பம்: சனீஸ்வரர், கேது, சுக்கிரன், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். உறவினர்கள் மதிப்பு, மரியாதை தருவர்.

குடும்ப செலவுகளுக்கான பணவரவு திருப்திகரமாகும். உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூர் பயணம் அதிகரிக்கும். புத்திரர் பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மனைவியின் கூடுதல் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் எதிர் பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம் : 25.10.19 பகல் 2:37 மணி – 26.10.19 நாள் முழுவதும்.
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

மீனம்: புதன், சுக்கிரன், குரு, சந்திரன் ராஜயோக பலன் தருவர். மனம், செயலில் புத்துணர்வு ஏற்படும். தாமதமான பணிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள்.

உங்களிடம் பலரும் நல்ல எண்ணங்களுடன் பழகுவர். சுற்றுலா சென்று வர வாய்ப்பு ஏற்படும். புத்திரர் கேட்ட பரிசு பொருள் வாங்கி தருவீர்கள். சொத்து பராமரிப்பு, பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் நற்செயல் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பண வரவும் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள்; பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம் : விநாயகர் வழிபாடு சகல நன்மை தரும்.