27-10-2019 முதல் 02-11-2019 வரை இந்த வார ராசிப்பலனில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்: ராகு, செவ்வாய், சந்திரன், குரு ராஜ யோக பலன் வழங்குவர். எவரிடமும் நிதானித்து பேசுவீர்கள். கஷ்டம் விலகி புதிய வளர்ச்சி பாதை உருவாகும்.
தம்பி, தங்கைக்கு அன்பு, பாசத்துடன் உதவுவீர்கள். தாயின் அன்பு, ஆசி மனதில் புதிய உத்வேகம் தரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். பூர்வ சொத்தில் வளர்ச்சியும் அதிக பண வரவும் கிடைக்கும். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். தொழிலில் இடையூறு விலகி உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
சந்திராஷ்டமம் : 29.10.19 இரவு 8:39 மணி – 31.10.19 இரவு 1:57 மணி
பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு வெற்றியளிக்கும்.

ரிஷபம்: சூரியன், புதன், சந்திரனால் நற்பலன் வந்து சேரும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிகள் நிறைவேற தனி கவனம் வேண்டும்.
வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் பண்பு, பாசத்துடன் பழக தேவையான பயிற்சி தருவீர்கள். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் செயல்களில் குடும்ப நலன் பற்றிய அக்கறை மிகுந்திருக்கும். தொழில் வளர்ச்சி பெற கிடைக்கின்ற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துங்கள். பணியாளர்கள் பணம் கடன் பெறுவதில் நிதானம் வேண்டும். பெண்கள் இஷ்ட தெய்வ வழி பாட்டில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பர் உதவுவார்.
சந்திராஷ்டமம் : 31.10.19 இரவு 1:58 மணி – 2.11.19 நாள் முழுவதும்
பரிகாரம் : பசு வழிபாடு சகல வளமும் தரும்.

மிதுனம் : குரு, சுக்கிரன், சந்திரன் அதிர்ஷ்டகரமான பலன் வழங்குவர். மனதில் புத்துணர்வு ஏற்படும். பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவீர்கள்.
உறவினர் நண்பர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். சமூக பணிகளில் உங்களின் பங்களிப்பு அதிகரிக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பண வரவும் கூடும். புத்திரர் உங்களிடம் அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி விரும்பி கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள்.தொழில் வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு கிடைக்கும்.பணியாளர்கள் தன் கடமையை உணர்ந்து பணி புரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள் நன்கு படித்து பாராட்டு பெறுவர்.
பரிகாரம் : அம்பிகை வழிபாடு சகல நன்மை தரும்.

கடகம்: பெரும்பான்மை கிரகங்கள் அளப்பரிய நன்மை வழங்குவர். இஷ்ட தெய்வ அருளால் புதிய முயற்சி நிறைவேறும்.
மனம் ஒருமுக தன்மையுடன் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரரின் செயல்களில் திறமை பளிச்சிடும். புதிய சொத்து, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளப்பரிய லாபம் கிடைக்கும். அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சிம்மம்: சூரியன், சுக்கிரன், குரு, ராகு வியத்தகு பலன் வழங்குவர். மனதில் ஞான சிந்தனை வளரும். செயல்களை புதிய முயற்சியால் நிறைவேற்றுவீர்கள்.
உறவினர் எதிர்பார்ப்புடன் அணுகுவர். தாராள பண செலவில் குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். புத்திரரின் அன்பு, பாசம் மகிழ்ச்சியை தரும். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும். வெளியூர் பயணத்தில் இனிய அனுபவம் கிடைக்கும். மனைவியின் கருத்தும், உதவியும் ஆறுதலாக இருக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற அதிக பயிற்சி பெறுவர்.
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

கன்னி: சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நற்பலன் கிடைக்கும். நண்பர்களிடம் சூழ்நிலை உணர்ந்து பேசுவீர்கள். செயல் சிறப்பாக அமைந்து நற்பெயர் பெற்று தரும்.
வீடு, வாகனத்தில் உரிய பராமரிப்பு வேண்டும். புத்திரர்கள் அறிவு, செயல் திறனில் முன்னேற உதவுவீர்கள். விவகாரங்களில் தீர்வு பெற தாமதமாகலாம். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளர வாய்ப்பு வரும். பணியாளர் இனிய அணுகுமுறையால் சலுகையை எளிதில் பெறுவர். பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள் பண செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

துலாம்: சுக்கிரன், சந்திரன், கேது, சனீஸ்வரரால் அளப்பரிய நன்மை ஏற்படும். செயல்கள் நேர்த்தியாக அமையும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதலை முழு மனதுடன் ஏற்று கொள்வர். இஷ்ட தெய்வ வழிபாடு சில நன்மையை தரும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் செழித்து ஆதாய பண வரவு சேமிப்பாகும். பணியாளர்கள் அக்கறையுடன் பணி புரிந்து சலுகை பெறுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் ஞாபக திறன் வளர்த்து படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம் : சிவன் வழிபாடு சகல வளமும் தரும்.

விருச்சிகம்: செவ்வாய், குரு, சுக்கிரன், சந்திரன் அளப்பரிய பலன் தருவர். சமூக நடப்பில் புதிய அனுபவம் கிடைக்கும்.
வீணாக பேசுபவரிடம் விலகுவீர்கள். பணிகளில் முன்னேற்றம் உருவாகும். நீண்ட துார பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். புத்திரர்கள் அறிவு, செயல் திறனில் சிறந்து விளங்குவர். வழக்க விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி அன்பு, பாசத்துடன் உதவுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து பணவரவு கூடும். வெளியூரிலிருந்து சுப செய்தி வந்து சேரும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
பரிகாரம் : முருகன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

தனுசு: சுக்கிரன், சூரியன், புதன், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். உறவினர் அன்புடன் சொந்தம் பாராட்டுவர். பணிகளில் தைரிய மனதுடன் ஈடுபடுவீர்கள்.
குறுக்கீடு விலகி புதிய வெற்றி பாதை உருவாகும். வீடு, வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும். புத்திரர் பெற்றோரின் ஆலோசனையை தயக்கமுடன் ஏற்று கொள்வர். குடும்பத்திற்கான பண செலவுகளில் தாராளம் இருக்கும். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் அன்பு, பாசத்துடன் குடும்ப நலன் காத்திடுவார். தொழிலில் இடையூறு விலகி பண வரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறி நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்

மகரம்: சூரியன், புதன், ராகு, சந்திரன் சுப பலன் வழங்குவர். நற்செயல்களால் பேரும், புகழும் கிடைக்கும்.
புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி அதிக பணவரவு பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புத்திரர் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். விவகாரங்களில் சுமூக தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். மனைவி உங்களுக்கு பெருமை தேடி தருவார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுவர். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : மகாலட்சுமி வழிபாடு சுபவாழ்வு தரும்.

கும்பம்: குரு, சுக்கிரன், சனீஸ்வரர், கேது அதிர்ஷ்டகரமான பலன் வழங்குவர். லட்சிய மனதுடன் முக்கியமான பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரரை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை வேண்டும். பகைவரால் உருவான தொந்தரவு பலமிழக்கும். மனைவி வழி சார்ந்த உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம் : 27.10.19 காலை 6:00 மணி – மாலை 4:28 மணி
பரிகாரம் : துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.

மீனம்: புதன், சுக்கிரன், சந்திரன் அளப்பரிய பலன் வழங்குவர். அக்கம் பக்கத்தவருடன் நல்லன்பு வளரும். பணிகள் முழு அளவில் நிறைவேறும்.
வாகன பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரர் செயல்களில் புதிய பரிமளிப்பு உருவாகும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி உங்களின் எண்ணங்கள் சிறப்பு பெற உதவுவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள் சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.
சந்திராஷ்டமம் : 27.10.19 மாலை 4:29 மணி – 29.10.19 இரவு 8:38 மணி
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு செல்வ வளம் தரும்.
