இந்த வார ராசிப்பலன்கள் (10-11-2019 – 16-10-2019) : எதிர்பாராத அதிர்ஷ்டம் யாருக்கு?

10-11-2019 முதல் 16-11-2019 வரை இந்த வார ராசிப்பலனில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்: குரு, சுக்கிரன், ராகு ராஜயோக பலன் வழங்குவர். மனதின் மகிழ்ச்சி செயல்களை சிறப்பாக உருவாக்கும். உடன் பிறந்தவர் ஓரளவு உதவுவர். தாயின் அன்பு, ஆசி ஊக்கம் தரும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரர் பெற்றோரின் ஆலோசனையை தயக்கமுடன் ஏற்று கொள்வர். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவியின் அன்பான கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்பர். பெண்கள் நிம்மதியான வாழ்வு பெறுவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு, பாராட்டு பெறுவர்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

ரிஷபம்: சூரியன், புதன், செவ்வாய், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். பணிகளில் மன பூர்வமாக ஈடுபடுவீர்கள். நண்பரின் உதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் விரும்பியபடி வாங்கலாம். புத்திரர் நற்செயல்களால் பெற்றோருக்கு பெருமையை தேடி தருவர். நோய் தொந்தரவு பெருமளவில் குறையும். மனைவியின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அதிக மூல தனத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்களுக்கு தாராள சலுகை கிடைக்கும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வெற்றி தரும்.

மிதுனம்: குரு, சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் வழங்குவர். தாமதமான செயல்களில் புதிய யுக்தியால் முன்னேற்றம் ஏற்படும்.

சுய கவுரவம் பாதுகாத்திடுவீர்கள். நற்குணமுள்ளவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர்களின் நற்செயல்கள் பெற்றோருக்கு பெருமையை தேடி தரும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணம் சேமிப்பாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம் : 3.11.19 காலை 9:42 மணி – 5.11.19 இரவு 7:49 மணி
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு செல்வ வளம் தரும்.

கடகம்: சனீஸ்வரர், கேது, சுக்கிரன், புதன் அதிக நன்மையை வழங்குவர். நிலுவை பணி நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். புத்திரரின் செயல் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் ஆதாய பலன் தரும். எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் ஆலோசனை குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில் வளர்ச்சியால் லாபம் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் கணவரின் அன்பினை பெறுவர். மாணவர்கள் நன்றாக படித்து பரிசு வாங்குவர்.

பரிகாரம் : துர்கை வழிபாடு நம்பிக்கை தரும்.

சிம்மம்: பெரும்பான்மை கிரகங்களால் அளப்பரிய நற்பலன் கிடைக்கும். மனதில் நம்பிக்கை வளரும். உத்வேகமுடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தம்பி, தங்கை அதிக அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றம் செய்வீர்கள். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேறுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விவகாரங்களில் இதமான அணுகு முறையால் தீர்வு கிடைக்கும். மனைவியின் பேச்சும் செயலும் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர மாற்று வழி உருவாகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி விகிதம் பெறுவர்.

சந்திராஷ்டமம் : 10.11.19 காலை 6:00 மணி – மாலை 6:50 மணி
பரிகாரம் : நாகதேவதை வழிபாடு நன்மை தரும்.

கன்னி: சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நற்பலன் உண்டு. உங்கள் பேச்சு மற்றும் செயலில் நிதானம் பின்பற்ற வேண்டும். இனிய அணுகு முறையால் வாழ்வு சிறப்பாகும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புத்திரர் விரும்பிய பொருள் கேட்டு பிடிவாதம் செய்வர். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி அதிக அன்பு, பாசம் கொள்வார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர் உதவுவார். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்களின் வெகு நாள் பிரார்த்தனை நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை வேண்டும்.

சந்திராஷ்டமம் : 10.11.19 மாலை 6:51 மணி – 13.11.19 அதிகாலை 4:38 மணி
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

துலாம்: சுக்கிரன், கேது, சனீஸ்வரர், சந்திரன் ராஜயோக பலன் தருவர். மனதில் உத்வேகம் ஏற்படும். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பயன்படுத்துவீர்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். எதிர்ப்புகளை சமயோசிதமாக சரி செய்வீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். தொழில், வியாபாரம் செழித்து பண வரவு சேமிப்பாகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்றுவர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற கூடுதல் பயிற்சி பெறுவர்.

சந்திராஷ்டமம் : 13.11.19 அதிகாலை 4:39 மணி – 15.11.19 பகல் 12:02 மணி
பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

விருச்சிகம்: குரு, சுக்கிரன், செவ்வாய், சந்திரன் சுப பலன் வழங்குவர். சில செயல்களில் இருந்த தாமதம் விலகும்.
பணிகளை உத்வேகமுடன் நிறைவேற்றுவீர்கள். குடும்ப தேவை தாராள பண செலவில் பூர்த்தியாகும். வாகனத்தில் கூடுதல் வசதி பெற சில மாற்றம் செய்வீர்கள்.புத்திரரின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பூர்வ சொத்தில் அளவான பண வரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் அன்பு, பாசம் மனதில் நம்பிக்கையை தரும். தொழிலில் உள்ள அனுகூலத்தை கவனமுடன் பாதுகாக்கவும் பணியாளர்கள் கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் பண செலவில் சிக்கனம் வேண்டும். மாணவர்கள் படிப்பில் எளிய நடையை பின்பற்றுவர்.
பரிகாரம் : பசு வழிபாடு செல்வ வளம் தரும்.

தனுசு: பெரும்பான்மை கிரகங்களால் அதிக நன்மையுண்டு. மனிதாபிமானத்துடன் செயல்படுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பண வரவும் அதிகரிக்கும். புத்திரர் பெற்றோருடன் அன்பு, பாசத்துடன் பழகுவர். நிர்ப்பந்த பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். முக்கிய செயல் நிறைவேற இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். மனைவியின் நற்செயல்கள் குடும்பத்திற்கு நற்பெயரை பெற்று தரும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்களுக்கு தாராள சலுகை கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

பரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

மகரம்: சூரியன், சுக்கிரன், ராகு, சந்திரன் வியத்தகு நற்பலன் தருவர். உங்கள் பேச்சும், செயலும் சிறப்பாக அமையும். நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வாகன பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் படிப்பு, அறிவாற்றலில் மேம்படுவர். இஷ்ட தெய்வ அருளால் துன்பம் விலகும். வழக்கில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். குடும்ப தேவை பெருமளவில் நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் கேட்ட கடனுதவி கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

கும்பம்: குரு, சனீஸ்வரர், கேது, சந்திரனால் தாராள நன்மை கிடைக்கும். தைரியத்துடன் பணி புரிவீர்கள். வீடு, வாகனத்தின் பேரில் அதிக பணம் கடன் பெற வேண்டாம். புத்திரரின் மன குழப்பம் தீர பக்குவமாக ஆலோசனை சொல்வீர்கள். உறவினர் அன்பு, பாசத்துடன் உதவுவர். பூர்வ சொத்தில் அளவான பண வரவு கிடைக்கும். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

பரிகாரம் : அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மீனம்: புதன், சுக்கிரன், சந்திரன் அனுகூலமாக உள்ளனர். மனதில் உருவான திட்டம் செயல் வடிவம் பெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும். புத்திரர் வேலை, அறிவு திறனில் மேம்படுவர். பூர்வ சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்தவும். விவகாரங்களில் தீர்வு பெற மாற்று உபாயம் தேவைப்படும். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவி கிடைக்கும். பணியாளர் அதிக வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் உயர்குண நலன் சிறக்க உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.