திருமணமான 20 நாட்களில் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமிழகத்தில்

திருமணமான 20 நாட்களில் மனைவி வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஓடியோவை கேட்டு கணவன் அதிர் ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் ஒரு உ யிர் பரி தாபமாக பறிபோயுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (26). இவருக்கும் ராஜஸ்ரீ (23) என்ற பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.

அப்போது மனைவி வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர் ச்சியடைந்து தேட ஆரம்பித்துள்ளார். அந்த சமயம் அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது.

அதில் அவரது மனைவி, உன்னை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு விரும்பிய வாழ்வை நான் தேடி போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் அதிர் ச்சியடைந்த வேல்முருகன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்ரீ தனது வீட்டின் அருகில் உள்ள சந்தோஷ் என்ற இளைஞருடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது ஒரே மகன் இப்படி செய்துவிட்டானே என்ற விரக்தியில் சந்தோஷின் தந்தை ஜெகதீசன் வீட்டில் வி ஷம் அ ருந்தி தற்கொ லை செய்துள்ளார்.

இதனிடையில் சந்தோஷ் – ராஜஸ்ரீ ஆகியோர் பெங்களூரில் இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.