வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி !

சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சங்கங்களின் சம்மேளனம் (IFRC) அனர்த்த நிவாரண அவசரநிலை நிதியிலிருந்து (DREF) 592,000 சுவிஸ்பிராங் (Swiss Franc) னை இலங்கையில் அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்க அனுமதியளித்துள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 3 மாவடங்களிலும் மிக கடுமையாக பாதிக்கபட்ட 2000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவிருக்கின்றது.

ஆரம்ப உடனடி உதவியாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு தலா ரூ 30,000 வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
With the IFRC’s Disaster Relief Emergency Fund approved for 592,000 Swiss francs, we will deliver immediate assistance to around 2000 families in 3 districts. As an immediate relief, 2000 flood-affected families will receive a cash grant of LKR 30,000.@IFRCAsiaPacific @ifrc pic.twitter.com/b58hKeV2H8
— Sri Lanka Red Cross (@SLRedCross) December 27, 2019