இலங்கையில் கொரோனாவால் முடக்கப்பட்ட பகுதி!
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கொரோனா பரவலினால் ராஜாங்கன யாய பிரதேசத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ராஜாங்கன யாய பிரதேசத்தில் 1, 3 மற்றும் 5இல் வசிக்கின்ற குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட கொரோனா பரவலில் இதுவரையில் 532 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த நிலைமையினுள் நாட்டில் ஊரடங்கும் சட்டம் அமுல்படுத்துவதற்கு அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.