பூட்டிய வீட்டுக்குள் ஆதரவற்று கிடந்த இ ளம் பெ ண்ணின் ச டலம்…அடக்கம் செய்ய மறுத்த அதிகாரிகள்!

தமிழகம்

இந்தியாவில் தமிழகத்தில் நீண்ட நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் ஒருவர் ச டலமாக கிடந்ததால் கொரோனா அச்சத்தின் காரணமாக அடக்கம் செய்ய அதிகாரிகளும், மக்களும் த யங்கியதால் அப் பகுதியில் நிலவிய பரபரப்பு.

கிருஷ்ணகிரியின் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அருகில் வசித்து வரும் பெண் கவிதா (வயது 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கவிதா சென்னையில் வேலை செய்து வந்துள்ளார், இவர் கடந்த மார்ச் தான் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது, திருமணமாகி வி வாகரத்தானவர் என்பதால் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மத்தூர் பகுதியில் உள்ள சில மருத்துவமனைகளில் கூலி அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக க டுமையான காய்ச்சலால் அ வதிப்பட்டு வந்தார், அந்த பெண் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை.

இதனை அடுத்து கடந்த 2 நாட்களாக அந்த பெண் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தபிரதேச மக்கள் பூட்டிய வீட்டுக்குள் காய்ச்சல் அறிகுறியுடன் பெண் இருப்பது குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் அறிவித்துள்ளனர்.

அதன் பேரில் மருத்துவ அலுவலர்கள் ஆம்புலன்சுடன் வந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என சளி, ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டனர்.

எனினும் கொரோனா தொற்றின் காரணமாக அப்பெண் இறந்திருக்கலாம் என அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் ச டலத்தை அடக்கம் செய்ய ம றுத்ததுடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் சுகாதார மற்றும் வருவாய்த்துறையினர் கொரோனா பயத்தால் அந்த பெ ண்ணின் ச டலத்தை அடக்கம் செய்ய தயக்கத்துடன் மறுத்துள்ளனர்.

இதன் காரணமாக அப் பெ ண்ணின் ச டலம் காலையிலிருந்து மாலை வரை அப்படியே இருந்துள்ளது. இதன் பின்னர் நிண்ட நேரமாக கிடந்த ச டலத்தை அப்பகுதியை சேர்ந்த மனித நேய மக்கள் கட்சியினர் சுமார் 15 பேர், கவச உடைகளுடன் அடக்கம் செய்துள்ளனர்.