மஞ்சள் தூளில் கலப்படம்!
இப்போது இலங்கையில் உள்ள விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படங்கள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நுகர்வோர் பெற்று கொள்ளும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, விற்பனை நிலையங்களை திடீர் சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன் போது வர்த்தக நிலையங்களில் கிடைத்த மஞ்சள் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் இயக்குனர் அசேல பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய சுற்றிவளைப்புகள் பொதுவான முறையில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய மோசடி செய்யும் வர்த்தகர்கள் குறித்து தகவல் வழங்குவதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1977 என்ற இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
கொழும்பு யோன் வீதிக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.இவற்றை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர் .
இவற்றை அதிக விலையின் கீழ் விற்பனை செய்யும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்டில் அதிகளவானோர் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளப்படுவதால் ஆபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.