இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை மிக விரைவில்!

கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்படும் ஆபத்து!

நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட அரசாங்கத்தின் தவறே காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் அரசாங்கத்தினால் சமூக கட்டுப்பாடுகளை தளர்த்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் இரண்டாவது அலை அல்ல மூன்றாவது அலையும் விரைவில் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றினை தற்போது கட்டுப்படுத்தியதாக அரசாங்கம் தொடர்ந்து கூறி வந்தாலும் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சில இடங்கள் பற்றிய தகவல் வெளியிடாமல் அரசாங்கம் மறைத்துள்ளது. இரண்டாவது அலையை மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.