இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பு நடத்திய அசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கம்பஹாவில் வகுப்பு நடத்திய அசிரியருக்கு கொரோனா!

கம்பஹா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புக்களை நடத்தி வந்த ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்ட 101 பேருக்கு PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

அதில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய பாடசாலை ஆலோசகரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

தொற்றுக்குள்ளான ஆசிரியர் கம்பஹாவில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்தியுள்ளதாக வைத்தியர் சுபாஸ் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரின் வகுப்புக்களில் கலந்து கொண்ட குறித்த மாணவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.