நாளை மறு தினம் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் கல்வி அமைச்சினால் விதிக்கப்பட்ட தடை!

கல்வியமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகள் நாளை மறுதினம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை தரம் 11, 12, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஏனைய மாணவர்களுக்கு அடுத்த மாதம் பத்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

எனினும் நாடாளவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு பயிற்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைகளில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தொடாத வகையிலான போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.