மூன்று வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம் பெண்..விசாரணையின் போது வெளியான அ திர்ச்சித் தகவல்!!

இந்தியா

இளம் பெண்ணொருவர் பணத்திற்காக இளைஞர்களை தனது வலையில் சிக்க வைத்து திருமணம் செய்து ஏமற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேறு வேறு பெயர்களில் மூன்று இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர், மேட்ரிமோனி இணைய தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஹைதராபாத்தில் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

விடுமுறை முடிந்ததும், சொப்னாவை, ஆஞ்சநேயலு டென்மார்க்கிற்கு அழைத்து செல்ல நினைத்துள்ளார். எனினும் சொப்னாவோ, எனக்கு வேலை தான் முக்கியம் என்று கூறி, டென்மார்க் செல்ல மறுத்து, ஹைதரபாத்திலே இருந்துள்ளார்.

இதனை அடுத்து ஆஞ்சநேயலு, தனியாக டென்மார்க்கிற்கு சென்றுள்ளார். அவர் டென்மார்க் சென்றவுடன், செப்னா, அவர் மாமனார், மாமியாரிடம், உங்கள் மகன் என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு நஷ்ட ஈடாகப் பணம் கொடுங்கள். இல்லையேன்றால் நடப்பதே வேறு என்று கூறி பிரச்சினை செய்துள்ளார்.

அவர்கள் மருமகளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடலாம் என்று அவரிடம் சமாதானம் பேச, சொப்னாவோ, பிரச்சனையை பெரிதாக்கியுள்ளார்.

இதனால் அவர்கள் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து பொலிசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் ஐபிஎஸ் இல்லை என்ற அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்னும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. விசாரணையில், சொப்னா எனும் பெயர் கூட பொய்யானது என்பது தெரிய வந்தது. ரம்யா எனும் இயற்பெயர் கொண்ட சொப்னா இதற்கு முன்பு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவரையும் ஆத்மகூரைச் சேர்ந்த சுதாகர் என்பவரையும் வெவ்வேறு பெயர்களில் திருமணம் செய்து, பணம் பறித்து ஏமாற்றியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் பண வேட்டையில் மூன்றாவதாகச் சிக்கியவர் தான் ஆஞ்சநேயலு. மூன்று பேரை ஏமாற்றிய பெண்ணைப் பொலிசார் கைது செய்த போதுதான் அந்தப் பெண் இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த பெண்ணைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டு, வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.