வனிதாவுக்கு, லஷ்மி ராமகிருஷ்ணன் எடுக்கும் அதிரடி நடவடிக்கை..! விழிபிதுங்கி நிற்கும் வனிதா!

நடிகை வனிதா..

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. எனினும் வனிதா அது திருமணத்திற்கான கொண்டாட்டம்தான். பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெற்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி வெறும் சூட்டிங் என்று கூறினர். ஆனால், திருமணம் செய்துவிட்டனர். எனக்கு என்னுடைய கணவர் பீட்டர் பால் வேண்டும் என்று பரபரப்பு பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் தன்னுடைய கணவரை மீட்டு தருமாறு முறையிட்டார். அதற்காக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பேச வந்துள்ளார். ஆனால், வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை பேசவிடாமல் என்னுடைய அந்தரங்க விஷயத்தில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை உள்ளது. என்று கூறி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி இழிவாக பேசியுள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த வகையில் அவர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸில்” ஒரு youtube Channel ஏற்பாடு செய்திருந்த Skype நேர்காணலின்‌ போது, வனிதா விஜயகுமார்‌ என்னையும்‌ எனது கணவரையும்‌ அநாகரிக வார்த்தைகளால்‌ தாக்கி பேசியிருந்தார்‌. என்னுடன்‌ பேச வேண்டும்‌ என்று வனிதா விஜயகுமார்‌ தான்‌ அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார்‌. ஆனால்‌ நேர்காணலில்‌ வேண்டுமென்றே தவறாக பேசினார்‌.

அதன் பின்னர் அது ஒளிபரப்பும்‌ செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, நானும்‌ எனது கணவரும்‌ எங்களது வழக்கறிஞர்‌ மூலமாக வனிதா விஜயகுமாருக்கு, குற்றவியல்‌ (Criminal) மற்றும்‌ உரிமையியல்‌ (Civil) சட்டத்தின்‌ கீழ்‌ நோட்டீஸ்‌ அனுப்பியுள்ளோம்‌. அதன்படி, Inspector, All Women’s Police Station, Vadapalani & SRMC station, Deputy Commissioner of Police, Vadapalani, Asst Commissioner மற்றும்‌ தமிழ்நாடு மாநில பெண்கள்‌ ஆணையம்‌ (Mahila Ayog) ஆகியோருக்கும்‌ நோட்டீசின்‌ நகல்‌ அனுப்பப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.