இலங்கையர்களுக்கு அமெரிக்கா வழங்கும் சலுகை..
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலுக்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் 100 பேருக்கு அமெரிக்க சந்தையில் நுழைய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
இந்த திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமான Delloitte Consulting நிறுவனம் நிதி வழங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாக விதிமுறைகளின்படி தயாரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவற்றினை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து சிறப்பு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.