இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!

இலங்கையில்

குறைந்த வருமான பெறுபவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக வழங்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்  போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், களுத்துறை பகுதி மக்கள் எதிர் கொள்ளும் கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டுமொத்த அரசியல் கலாசாரம் மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  முன்னெடுத்துள்ள நடைமுறைகள் குறித்து மக்கள் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் மோதல்கள் அற்றதொரு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது  தெரிவித்துள்ளனர்.