இந்தியா..
இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் இருக்கின்ற மிசாரப்பூர் மாவட்டத்தின் சிந்தக்கரபூர் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகளை, மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இந்த பணியில் தொழிலாளர்கள் அங்குள்ள கிராமமான அங்கன்வாடியில் தங்கியிருந்து பணி செய்து வந்துள்ளனர், பணியை முடித்த தொழிலாளிகள் நன்கு அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
அந்த நேரத்தில், லவ்லெஷ் என்ற தொழிலாளியின் ஜீன்ஸ் பேண்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது, தனது பேண்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது என்பதை அறிந்து அப்போது பயத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து மற்ற தொழிலாளிகளிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகளவு பயத்தால் அசைந்தால் பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் பேண்டிற்குள் இருந்த பாம்பை அசையாமல் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். பின்னர் உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாம்பு பிடிக்கும் நபர் வரவழைக்கப்பட்டார்.
பின்னர் அவரின் ஜீன்ஸ் பேண்ட்டை சிறிது சிறிதாக கிழித்து பாம்பை வெளியே எடுத்துள்ளனர்.சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அறிந்த உள்ளுர் மக்களும், பக்கத்து கிராம மக்களும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.