நடிகை சினேகாவின் மகள்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகை சினேகா பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
இவர், நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு பிரசன்னா விஹான் என்ற மகன் பிறந்தார்.
பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி னார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இதையடுத்து, மகளுக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள், முதலும் முடிவும் இல்லாதவள் Forever என்பது அர்த்தம் என பிரசன்னா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது சினேகா பிரசன்னா மகளின் புகைப்படம் முதன்முறையாக சமூகவலைத்தளத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. இருந்தும் முகம் தெரியாத இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.