தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2000 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தங்க விற்பனையாளர்கள் அதிகளவான லாபத்தை ஈட்ட முயற்சித்தமையினால் இவ்வாறான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தல் மற்றும் உலக பொருளாதாரத்திற்கு சேரும் பணத்தை தங்கமாக வைத்துக் கொள்வதற்கு முதலீட்டாளர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்க மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் சந்தையில் வெள்ளி விலையும் பாரியளவு அதிகரித்துள்ளது.
சமகாலத்தில் காணப்படும் நெருக்கடி நிலைமை மேலும் நீடித்தால் தங்கம் மற்றும் விலையில் மேலும் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.