இந்தியா..
இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் இருந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர்.
தொழிலாளர்களை ஏற்றுக்கொண்ட பேருந்து, இன்று அதிகாலை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் அருகே சென்று கொண்டு இருந்தது.
இந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக பேருந்து லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஒருபுறம் முழுவதுமாக சி தைந்து போனது. பேருந்தில் இருந்த தொழிலாளிகள் இ டிபா டுகளில் சி க்கி உ யிருக்காக அ லறித்து டித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் மொத்தமாக 7 பேர் ப ரிதாபமாக உ யிரிழந்த நிலையில், 7 பேர் ப லத்த கா யமும் அடைந்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்தில் உ யிரிழந்தவர்களுக்கு ஒடிசா மாநில முதல்வர் இரங்கல் அறிவித்து, ப லியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.