கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கொரோனா தொற்று.. அதிகரிக்கும் நோயாளிகள்..!!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கொரோனா தொற்று..

நாட்டில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கைதி ஒருவருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த இருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய,இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3121 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 2918 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது 191 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இது வரை 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.