தமிழ்நாடு..
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால். இவர் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் கீர்த்தனா. ஃபேஷன் டிசைனிங் பயின்றுள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், கீர்த்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது.
இவர்களின் திருமணம் செப்டம்பர் 2-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஜெயபால் அழைப்பிதழை கொடுத்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி பால் வாங்கி வருவதாக வீட்டை விட்டுக் கிளம்பிய மணப்பெண் கீர்த்தனா, அதற்குப் பின்னர் வீட்டிற்கு வரவில்லை.
இதன் பின்னர், பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளையில், கீர்த்தனா வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு பெ ரும் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இ தனால் ஆ த்திரமடைந்த ஜெயபால் தனது மகள் கீர்த்தனா இ றந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அ டித்து, ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெ ரும் அ திர்ச்சியும், ப ரப ரப்பும் ஏற்பட்டுள்ளது.