சங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்து ..
யாழ் சங்குப்பிட்டி வீதியில் இன்று டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த கோர விபத்து தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் நேற்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதி விபத்தில் உயிரிழந்த பெண் 4 பிள்ளைகளின் தாயான, முன்னாள் பெண் போராளி மீரா (வயது 47) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
அந்த பெண் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி பகுதியில் இருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.