சாரதி அனுமதி பத்திரம் விநியோகத்தில் மாற்றம் !
நாட்டில் எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படாது என்று போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண் பரிசோதனையே செய்யப்படும்.
சகலருக்கும் எக்ஸ்-ரே கதிர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் சீனி மற்றும் குருதி அழுத்தங்கள் தொடர்பான சேவைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் இது நபரொருவர் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதில் எந்த ஒரு தாக்கமும் செலுத்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரிகளுக்கு அறியப்படுத்துவதற்காக மாத்திரமே இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.