வாகனம் வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை….

நாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சந்தையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் அதிக விலைக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கத்தின் நிதி இருப்புக்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு இருக்கும் போது, வாகனங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாமெனவும் சம்பத் மெரிஞ்சிகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலும், தற்போது உள்ள நிலைமையின் காரணமாக 40 வீதமான கார் விநியோகஸ்தர்கள் திவாலாகிவிட்டனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.