இலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..!

மீண்டும் மின் தடை…

அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய மின்சார கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற நடவடிக்கை காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள முழுமையான மின் தடையை தடுக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மின்சார சபையின் பிரதி பொது மேலாளர் சுஜீவ அபயவிக்ரம கடிதம் மூலம் மின்சார சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் மின்சார சபை ஒழுங்கு முறை உரிய முறையில் திட்டமிட்டிருந்தால் சிறு தவறு ஏற்பட்டாலும் கட்டமைப்பு முழுமையான செயலிழக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த விடயத்தை சரிப்படுத்தவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் இலங்கை இந்த நிலைமையை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.