இலங்கை தமிழருக்கு பெருமை சேர்த்த ஈழத்துபெண்!
கனடாவில் வசித்து வருகின்ற ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களை ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற்ற அமைப்பான அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட் (ஏ.சி.சி.பி குளோபல்) அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக தெரிவு செய்துள்ளது.
இவர் வன்னியை சொந்த இடமாக கொண்டதுடன் 2010ற்கு பின்பு தான் புலம் பெயர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர் இலங்கையில் இருந்த போது சிறு வயதில் இருந்தே பல சமூக சேவைகளை செய்து வந்ததுடன், கனடா சென்ற பின்னரும் அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் அவரது கடின உழைப்பினால் கிடைத்த இந்த பொறுப்பான பதவி அவரை விட, எமது தமிழ் இனத்திற்கே கிடைத்த பெருமைக்குரிய ஒரு வரப்பிரசாதமாகும்.
இலங்கை தமிழருக்கு பெருமை சேர்த்த அவருக்கு நாம் வாழ்த்துக்களை கூறுவதோடு நாமும் அவருடன் சேர்ந்து அவர் வெற்றி பெற உறுதுணையாய் இருப்போம் என மனித உரிமை செயல்பாட்டாளர் ம. கஜன் கூறியுள்ளார்.