இலங்கையில்
திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மொணராகலை – புத்தள பிரதேசத்தில் உள்ள துட்டகைமுனு தேசிய பாடசாலையைச் சேர்ந்த 06ஆம் வகுப்பு மாணவியே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவருகின்றது.
பாடசாலைக்கு சமூகமளித்திருந்த குறித்த மாணவிக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து புத்தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொணராகலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
பாடசாலையில் வைத்து மதிய உணவு உட்கொண்டதன் பின்னர் திடீரென மாணவி மயக்கமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த மாணவி, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் சுமார் 30 நிமிடங்களுக்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.