கொரோனா தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள்…!
இம் முறை இடம் பெறுகின்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பரீட்சை மோசடிகளையும், தடைகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.