இலங்கையில் கொரோனாவினால் பலியான குழந்தை..
இலங்கையில் பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பினை சேர்ந்த குறித்த குழந்தை, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் (LRH) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் குறித்த குழந்தையின் பெற்றோர் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அவர்களது உறவினர்கள் குழந்தையின் ஜனாஸாவினை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த குழந்தையின் ஜனாஸா, விரைவில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த தகவலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அலி சாஹிர் மௌலான உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.