புலிகள் மீளுருவாக்கம் ; யாழ்.பல்கலைக்கழக மாணவனுக்கு சிங்கள அரசினால் அச்சுறுத்தல்

புலிகள் மீளுருவாக்கம்

யாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீவன், பேரினவாத இலங்கை அரசுக்கான பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், தமிழீழ விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூலூடாக முனைகிறார் என தேரர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்தே பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.