லண்டனில் பிரிட்டிஷ் போராளிகள் விடுவிக்க கோரி போராட்டம்!
இரண்டு பிரிட்டிஷ் போராளிகள் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர், உக்ரைனுக்காகப் போரிட்டபோது ரஷ்ய துருப்புக்களால் கைப்பற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு கூலிப்படையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஐடன் அஸ்லின், ஷான் பின்னர் மற்றும் சவுடுன் பிராஹிம் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து “டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உச்ச நீதிமன்றம்” உத்தரவிட்டது.
போர்க் கைதிகள் தொடர்பான சர்வதேச நியதிகளுக்கு மாறாக இரண்டு பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைப்பினர் 17.06.2022 அன்று ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக மூன்று இராணுவத்தினரின் உயிரைக் காப்பாற்றவும் அவர்களின் மனித உரிமைகளுக்காகவும் போராட்டம் ஒன்றை போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.